×

குட்டையில் சிக்கிய யானை மீட்பு

பாலக்காடு: குட்டையில் சிக்கிய காட்டு யானையை வனத்துறையினர் போராடி மீட்டனர். பாலக்காடு மாவட்டம் அட்டப்பாடி அகழியை அடுத்த வட்டலங்கி பகுதியைச் சேர்ந்த கணபதி என்பவரின் தோட்டத்தில் குட்டை உள்ளது. நேற்று அப்பகுதிக்கு தோட்டத்து வேலைக்கு தொழிலாளர்கள் சென்றுள்ளனர். அப்போது காட்டு ஆண் யானை ஒன்று சிக்கி கொண்டு மேலே வரமுடியாமல் திணறி கொண்டிருந்ததை பார்த்துள்ளனர்.

தொழிலாளர்கள் உடனே தோட்ட உரிமையாளருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவயிடத்துக்கு சென்ற உரிமையாளர் கணபதி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சம்பவயிடத்துக்கு வந்த வனத்துறையினர் ஜே.சி.பி., இயந்திரம் மூலம் குளத்திலிருந்து வாய்க்கால் தோண்டினர். அதன் வழியாக யானை மேலே வருவதற்கு பாதை அமைக்கப்பட்டது. சுமார் 2 மணி நேரம் போராடி யானை குட்டையில் இருந்து மீட்டனர். இதையடுத்து வனத்துறையினர் அந்த யனையை வனப்பகுதியில் விடுவித்தனர்.

The post குட்டையில் சிக்கிய யானை மீட்பு appeared first on Dinakaran.

Tags : Palakkad ,Palakkad District ,Attappadi Trench ,Vatalangi ,Dinakaran ,
× RELATED பாலக்காடு மாவட்டத்தில் கடும் வெயில்...